எம்.எல்.ஏ-க்களை மீட்டுத்தாருங்கள்… ஆளுநரிடம் சரணடைந்த கமல்நாத்!

 

எம்.எல்.ஏ-க்களை மீட்டுத்தாருங்கள்… ஆளுநரிடம் சரணடைந்த கமல்நாத்!

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் இன்று காலை திடீரென்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ராஜினாமா செய்யப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை வாசல் முன்பு வெற்றியைக் குறிக்கும் வகையில் விரல்களைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார்.

பா.ஜ.க-வினர் கடத்தி பெங்களூருவில் அடைத்து வைத்துள்ள எம்.எல்.ஏ-க்களை மீட்க உதவும்படி மத்தியப்பிரதேச ஆளுநருக்கு கமல்நாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் இன்று காலை திடீரென்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ராஜினாமா செய்யப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை வாசல் முன்பு வெற்றியைக் குறிக்கும் வகையில் விரல்களைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார்.

kamalnath-and-lalji

ஆளுநர் லால்ஜி டான்டனை சந்தித்த கமல்நாத் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வினர் பெங்களூருவில் கடத்தி வைத்துள்ளனர். பெங்களூருவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்களை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.