எம்.எல்.ஏக்கள் குழப்பத்தில் உள்ளனர்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

 

எம்.எல்.ஏக்கள் குழப்பத்தில் உள்ளனர்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தூத்துக்குடி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தேர்தலை சந்திப்பது மற்றும் மேல் முறையீடு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது. அவர்கள் முதலில் மேல்முறையீடு என்று அறிவித்தார்கள். பின்னர் தேர்தலை சந்திக்கிறோம் என்று அறிவித்து உள்ளனர். நாளை என்ன அறிவிப்பார்கள் என்று தெரியாது.

தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து, தேர்தல் பணியாற்ற வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்கள். அதனை செயல்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம் என்றார்.