எப்பவும் எங்க அடி நெத்தியடிதான்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

 

எப்பவும் எங்க அடி நெத்தியடிதான்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

காவிரி, மேகதாது அணை விவகாரத்தில் எப்போதும் எங்கள் அடி நெத்தியடிதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: காவிரி, மேகதாது அணை விவகாரத்தில் எப்போதும் எங்கள் அடி நெத்தியடிதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதற்கிடையே மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு. மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது. காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடிதான் என்றார்.