எப்படி தூங்கினால் நோய்களே கிட்ட வராது? சித்தர்கள் சொல்லும் ரகசியம் என்ன?

 

எப்படி தூங்கினால் நோய்களே கிட்ட வராது? சித்தர்கள் சொல்லும் ரகசியம் என்ன?

‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!’ன்னு பாட்டு பாடி வெச்சிருக்கோம். ஆனா எத்தனைப் பேர் படுக்கையில் படுத்ததும் அடுத்த நொடியில் தூங்கிப் போகிறோம்? எத்தனைப் பேர் இரவு முழுக்க தூக்கம் வரலைன்னு தவிச்சுக்கிட்டு இராத்திரி 1 மணிக்கு வாட்ஸ் -அப், பேஸ்புக்ன்னு மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கோம். ஆரோக்கியமான தூக்கத்திற்கு நாம் படுத்துறங்கும் திசை, நிலை என்று பல காரணங்கள் இருக்கு. 

‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!’ன்னு பாட்டு பாடி வெச்சிருக்கோம். ஆனா எத்தனைப் பேர் படுக்கையில் படுத்ததும் அடுத்த நொடியில் தூங்கிப் போகிறோம்? எத்தனைப் பேர் இரவு முழுக்க தூக்கம் வரலைன்னு தவிச்சுக்கிட்டு இராத்திரி 1 மணிக்கு வாட்ஸ் -அப், பேஸ்புக்ன்னு மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கோம். ஆரோக்கியமான தூக்கத்திற்கு நாம் படுத்துறங்கும் திசை, நிலை என்று பல காரணங்கள் இருக்கு. 

sleep

தூங்குறதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பற்றியும் நம்முடைய சித்தர்கள் சில விஷயங்களைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவங்க வகுத்து சொன்ன விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கேற்ற மாதிரி உங்க தூக்கத்தை அமைச்சுக்கிட்டா ஆரோக்கியமும் கிடைக்கும். ராத்திரி முழுக்க சரியான தூக்கமே இல்லை என்பது மாதிரியான புலம்பல்களும் இருக்காது. 
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.  இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றியும்  சித்தர் பாடல்கள் சொல்லுது. 
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்  
என்பது தான் பாட்டு. 
அதாவது, இராத்திரியில் தூங்காமல் இருப்பவர்களிடம் இயல்பாகவே புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களிலும் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் ரொம்பவே ஈஸியா வந்து சேருமாம். 
அதே மாதிரி எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் சித்தர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவர்களோட வார்த்தைகள்ல சொல்லணும்னா 
உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.  இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி போன்றவை உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

sleep

குப்புறப் படுக்கவும் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும் படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்த நீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். 
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக மாறிவிடும் என்கிறார்கள். இனி தூங்கும் போது இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க!