“எப்படி சூப்பர் ஓவரை விளையாடணும்னு தெரிந்திருக்கவில்லை!” – 3வது டி20 போட்டி குறித்து ரோகித் ஷர்மா பேட்டி

 

“எப்படி சூப்பர் ஓவரை விளையாடணும்னு தெரிந்திருக்கவில்லை!” – 3வது டி20 போட்டி குறித்து ரோகித் ஷர்மா பேட்டி

சூப்பர் ஓவரை எப்படி விளையாட வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

ஹாமில்டன்: சூப்பர் ஓவரை எப்படி விளையாட வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து நடந்த அடுத்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டி சமனில் முடிந்ததை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ரோகித் ஷர்மாவின் கடைசி 2 அட்டகாச சிக்ஸர்களால் இந்திய அணி போட்டியை வென்றதோடு, டி20 தொடரையும் கைப்பற்றியது. முன்னதாக இந்தப் போட்டியில் தொடக்க வீரராகவும் ரோகித் ஷர்மா அற்புதமாக விளையாடி 65 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடக்கம்.

ttn

இந்நிலையில், நேற்றைய போட்டி குறித்து ரோகித் ஷர்மா பேசுகையில், “இதற்கு முன்பு சூப்பர் ஓவரில் நான் விளையாடியது இல்லை. அதனால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டுமா அல்லது ஒரு ரன் எடுத்து விட்டு பின்பு பார்த்துக் கொள்ளலாமா என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. இது சிறந்த போட்டியாகும். நான் ஆட்டமிழந்த விதம் ஏமாற்றம் அளித்தது. இந்திய அணிக்காக கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்ய விரும்பினேன். இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றுவோம் என்பது தெரியும். முக்கியமான வீரர்கள் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றது முக்கியமான விஷயம்’’ என்றார்.