எப்படி இருந்த யோகா டீச்சர் இப்போ இப்படி ஆகிட்டாங்க : சாகச பயணத்தால் நடந்த விபரீதம்!?

 

எப்படி இருந்த யோகா டீச்சர் இப்போ இப்படி ஆகிட்டாங்க : சாகச பயணத்தால் நடந்த விபரீதம்!?

காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட யோகா ஆசிரியை ஒருவர 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 

அமெரிக்கா: காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட யோகா ஆசிரியை ஒருவர 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் ஹவாய் மாகாணத்தை  சேர்ந்தவர்  அமண்டா எல்லெர். 35 வயதான இவர் கடந்த 8 -ம் தேதி மக்கோவா நகரின் காட்டு பகுதிக்கு தனியே காரில் சென்றுள்ளார்.அடர்ந்த காட்டை அடைந்த அவர், காரை நிறுத்தி விட்டு, காட்டுக்குள்  நடந்து சென்றுள்ளார். 

amanda

இதையடுத்து அமண்டா சென்று வெகுநேரமாகியும் வராததால், அவரது குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முற்பட்ட போது அமண்டா செல்போனை காரிலேயே வைத்து விட்டு சென்று விட்டதால் அவரை கண்டுபிடிப்பது கடினமானது.

amanda

இதை தொடர்ந்து அமண்டாவை கண்டுபிடிக்கும் பணியில் 1000 பேர் இறங்கினர். இருப்பினும் அவரை கண்டுபிடிப்பது நாளுக்கு நாள் கடினமாகி கொண்டே போயுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவரை காட்டில் தேடியுள்ளனர். 17 நாள்களுக்கு பின் அமண்டா காட்டுக்குள் ஒரு அருவியின் அருகே இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக அவரை மீட்டுள்ளனர். 

amanada

காட்டில் வழி தெரியாமல் தொலைந்து போன அமண்டா 17 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல்  இருந்ததோடு,  இலைதழைகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார்.   காட்டில் வெகுதூரம் நடந்ததால், அமண்டாவின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வருகிறார்.