எப்படியாச்சும் ஜெயிச்சிடனும் சாமி… தியானத்தில் ஈடுபடும் மோடி!!

 

எப்படியாச்சும் ஜெயிச்சிடனும் சாமி… தியானத்தில் ஈடுபடும் மோடி!!

1,755 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

கேதார்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள குகையில் பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கடந்த 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரசாரம் ஓய்வடைந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.