என் வீட்டு பெண்களை குறிவைக்கும் இந்து அமைப்பினர்: ஆவேசமான பியூஸ் மனுஷ்

 

என் வீட்டு பெண்களை குறிவைக்கும் இந்து அமைப்பினர்: ஆவேசமான பியூஸ் மனுஷ்

தன்னையும்,  தன் குடும்பத்து பெண்களையும் அவதூறு செய்து பதிவுகள் வெளியிட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது சமூக செயற்பாட்டாளர்  பியுஷ் மனுஷ் புகார் கொடுத்துள்ளார்.

சேலம்: தன்னையும்,  தன் குடும்பத்து பெண்களையும் அவதூறு செய்து பதிவுகள் வெளியிட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது சமூக செயற்பாட்டாளர்  பியுஷ் மனுஷ் புகார் கொடுத்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளர்  பியுஷ் மனுஷ்  தனது மனைவியுடன் நேற்று  காலை சேலம் காவல் ஆணையர்  அலுவலகம் வந்து ஆணையர் கே.சங்கரைச் சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘ என்னையும் என் குடும்பத்தைப் பற்றியும் இழிவாகவும் பொய்யாகவும் சித்திரித்து வருகின்றனர். என்மீது அவதூறு பரப்பும் வேலையை பாஜக, இந்துத்துவா அமைப்பினர்  தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளனர்.

piyush

கடந்த டிசம்பர் 23ம் தேதி அன்று நித்யானந்தாவுடன் அமர்ந்திருந்த ஹெச். ராஜாவை நோக்கி ‘ஒரு கற்பழிப்பு குற்றவாளியுடன் அமர்ந்திருக்கிறீர்களே? ஒரு பெரிய கட்சியின் தேசிய செயலாளர் இப்படி செய்யலாமா?? என்று நான் கேள்வி கேட்ட நாளிலிருந்தே நானும் என் குடும்பத்தினரும் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்படுகிறோம். 

சுமார் 500க்கும் மேற்பட்டோர் மிகவும் கீழ்த்தரமான தாக்குதலில் என் குடும்பத்தை மட்டமாகச் சித்தரித்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்’ என்றார்.