என் ரசிகர்கள் மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பது மகிழ்ச்சியாகவுள்ளது- ரஜினிகாந்த்
மும்பையில் பெய்யும் கனமழையால் தர்பார் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
மும்பையில் பெய்யும் கனமழையால் தர்பார் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
சென்னை விமான நிலையம் வந்த ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “குடிநீர் பிரச்சனைகளுக்காக எனது ரசிகர்கள் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதனை பல ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம். இப்போதுதான் அது வெளியில் தெரிகிறது. ரசிகர்களை மனதார பாராட்டுகிறேன்.
சேவை செய்யும் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள். உடனடியாக மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகள், குளங்கள் எல்லாவற்றையும் மழைக்காலத்துக்கு முன்னதாக தூர்வாறவேண்டும். மழைநீரை போர்க்கால அடிப்படையில் சேமிக்க வேண்டும். நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. சரியான நேரத்தில் தபால் வாக்கு சீட்டு கிடைத்திருந்தால் வாக்களித்திருப்பேன்” எனக் கூறினார்.