‘என் மாமியார் தலைமுடியை பிடித்து அடித்தார்…’ ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார்!

 

‘என் மாமியார் தலைமுடியை பிடித்து அடித்தார்…’ ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார்!

லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா ராய் குறைகூறி வந்த நிலையில் இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா ராய், தனது மாமியாரும் முன்னாள் பீகார் முதல்வருமான ர் முதல்வருமான ராப்ரி தேவி மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

ttn

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த மே  மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலே கணவர் வீட்டார் தன்னை துன்புறுத்தி வருவதாக லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா ராய் குறைகூறி வந்த நிலையில் இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ttn

இந்நிலையில் தற்போது புகுந்த வீட்டிலிருந்து வெறியேறியுள்ள நிலையில் அதற்கு முன்பாக போலீசில் மாமியார் ராப்ரிதேவி தலைமுடியைப் பிடித்து இழுத்து  தன்னை தாக்கியதாகப் புகார் கூறியுள்ளார். மேலும் என் குடும்பத்தை பற்றி  பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் அவதூறு  போஸ்டர்கள் ஒட்டினார்கள். அதுகுறித்து என் மாமியாரிடம் நான் கேட்டதற்கு என்னை அவரும் அவரின் உதவியாளரும் சேர்ந்து கொண்டு அடித்தார்கள்’ என்று கூறி பரபரப்பை  கிளப்பியுள்ளார்.