என் மாநிலம்.. என் ஊர்.. என் ரோடு.. களமாவூர் சுங்கச்சாவடியை இழுத்து மூடும் போராட்டம்! வேல்முருகன் அறிவிப்பு

 

என் மாநிலம்.. என் ஊர்.. என் ரோடு.. களமாவூர் சுங்கச்சாவடியை இழுத்து மூடும் போராட்டம்! வேல்முருகன் அறிவிப்பு

என் மாநிலம் என் ஊர், என் ரோடு.. என் ரோட்டில் நான் செல்ல உனக்கெதுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

என் மாநிலம் என் ஊர், என் ரோடு.. என் ரோட்டில் நான் செல்ல உனக்கெதுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

toll

நடுரோட்டில் கம்பியை நீட்டி தண்டால் வசூல் செய்யும் சுங்கச்சாவடிகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் சுங்கச்சாவடியை இழுத்து மூடும் போராட்டத்தில் வேல் முருகனும் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.