“என் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டினான்; கொன்றுவிட்டேன்” கணவன் பரபரப்பு வாக்குமூலம்!

 

“என் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டினான்; கொன்றுவிட்டேன்” கணவன்  பரபரப்பு வாக்குமூலம்!

முதற்கட்ட விசாரணையில்,  இறந்தவர் கயத்தாறையடுத்த கம்மாப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மில்டன்ராஜ் என்பது தெரியவந்தது.

கோவில்பட்டி அருகே கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில்  அருகே இருந்த தோட்டத்தில்  ஆண்  சடலம் ஒன்று அழுகிய நிலையில்  கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  இறந்தவர் கயத்தாறையடுத்த கம்மாப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மில்டன்ராஜ் என்பது தெரியவந்தது.

ttn

கட்டிட தொழிலாளியான அவர் கடந்த 25 ஆம் தேதி அங்குள்ள தேவாலயத்திற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் மில்டன்ராஜ் செல்போனை போலீசார் ஆய்வுசெய்ததில் அவர் அதேபகுதியை சேர்ந்த  விஜயன் என்ற கொத்தனார் விஜயனுக்கு போன் செய்து பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ttn

இதை தொடர்ந்து விஜயனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மில்டன்ராஜை  தான்தான் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘ மில்டன் ராஜ் என்னுடைய மனைவி குளிக்கும்  போது  அவளை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டினார்.அதனால் அவரை என் நண்பர்களின் உதவியுடன் கொன்றேன். அவர் செல்போனில் இருந்து வீடியோ மற்றும் போட்டோக்களை டெலிட் செய்து விட்டேன்’ என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.