‘என் மகளைக் கொடுமைப் படுத்தினான்..அதனால் தான்…’ மருமகனைக் கொன்று புதைத்த மாமனாரின் பகீர் வாக்குமூலம்!

 

‘என் மகளைக் கொடுமைப் படுத்தினான்..அதனால் தான்…’ மருமகனைக் கொன்று புதைத்த மாமனாரின் பகீர் வாக்குமூலம்!

எங்கும் அவரை பற்றிய துப்பு கிடைக்காததால் கடைசியாக சித்ராவின் உறவினர்களிடம் விசாரித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைகுண்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பாண்டியின் மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். செல்லப்பாண்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போகியதாக சித்ரா, செல்லப்பாண்டியின் அண்ணன் ராமராஜிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, தனது தம்பியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட ராமராஜ் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் எங்கும் அவரை பற்றிய துப்பு கிடைக்காததால் கடைசியாக சித்ராவின் உறவினர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, சித்ராவின் தந்தை மகாராஜன், முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த ராமராஜ் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். 

ttn

ராமராஜ் போலீசாரிடம் புகார் கொடுத்ததைத் தெரிந்து கொண்ட மகாராஜன் வீட்டிலிருந்து வெளியேறித் தலைமறைவாகி உள்ளார். இதனால் அவர் தான் செல்லப்பாண்டியை ஏதோ செய்திருக்கிறார் என்று  உறுதிப் படுத்திய போலீசார், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் சில நாட்கள் கழித்து மகாராஜன் தானாகவே வந்து போலீசார் சரண் அடைந்துள்ளார். 

ttn

அப்போது அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செல்லபாண்டி தன் மகளைக் கொடுமைப் படுத்தியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை வைத்துச் செல்லப்பாண்டியை கொலை செய்து விட்டேன் என்றும் அதன் பின்னர் சடலத்தை எரித்து புதைத்து விட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது போலீசாரை அதிர வைத்துள்ளது. இதனையடுத்து, கூலிப்படையினர் 4 பேரைக் கைது செய்த போலீசார், செல்ல பாண்டியின் உடலைத் தோண்டி எடுத்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சித்ராவின் சகோதரர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.