‘என் மகனை போலீஸ் என்கவுண்டர் செய்ய பிளான் பண்றாங்க’.. பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசியின் தந்தை பரபரப்பு புகார்!

 

‘என் மகனை போலீஸ் என்கவுண்டர் செய்ய பிளான் பண்றாங்க’.. பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசியின் தந்தை பரபரப்பு புகார்!

பெண்களிடம் பேசி, பழகி ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் காசு கேட்டு மிரட்டி, பணம்  பறித்துள்ளார். 

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் காசி(26) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து விட்டு, மீண்டும் நாகர்கோவிலுக்கே வந்துள்ளார். அப்பாவின் கறிக்கடையை பார்த்துக் கொண்டு வரும் அவர், எப்போது பார்த்தாலும் சோஷியல் மீடியாக்களை உபயோகப்படுத்திக் கொண்டே இருப்பாராம். அதாவது கட்டுடல் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக பெண்களுக்கு மாய வலையை விரித்துள்ளார் காசி. அதில் சிக்கும் பெண்களிடம் பேசி, பழகி ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் காசு கேட்டு மிரட்டி, பணம்  பறித்துள்ளார். 

ttn

இதையே தொழிலாக செய்து வந்த காசியின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக பொருளாதார வசதி இருக்கும் பெண்களையே குறி வைத்து காசி, வலை விரித்த இவர் மீது கன்னியாகுமரி எஸ்.பியிடம் ஒரு பெண் மருத்துவர் புகார் அளித்ததன் பேரில் கடந்த மாதம் 24 ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் அவரிடம் இருந்த லேப்டாப், ஹார்ட் டிஸ்க் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

ttn

இதனையடுத்து அவர் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். காசி செய்த குற்றத்தை பற்றி 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காசியின் தந்தை தங்க பாண்டியன், தன் மகனை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதனால் அவரை வீட்டிலிருந்து அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.