என் பொண்ண இப்படி செஞ்சவனுங்களுக்கு இந்த தண்டனை தான் கொடுக்கணும் … பிரியங்கா ரெட்டி தாய் ஆவேசம்!

 

என் பொண்ண இப்படி செஞ்சவனுங்களுக்கு இந்த தண்டனை தான் கொடுக்கணும் … பிரியங்கா ரெட்டி தாய் ஆவேசம்!

சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதை மதுபோதையிலிருந்த முகமது அஷாவின் கும்பல் நோட்டமிட்டிருக்கிறது

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி  கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.  இதனால் தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்த பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து  மூலம் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம்.  கடந்த 27 ஆம் தேதி, அவசர பணிக்காக சென்ற அவர்  மாலை  6 மணிக்கு  சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதை மதுபோதையிலிருந்த முகமது அஷாவின் கும்பல் நோட்டமிட்டிருக்கிறது.

ttn

அதன்படி கொடூரமாகத் திட்டம் தீட்டிய அவர்கள், பிரியங்காவின் இருசக்கர வாகனத்தைப் பஞ்சராக்கியுள்ளனர். பின்னர் அவருக்கு உதவி செய்வது போல நடித்து அவரை அங்கிருந்து தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று எரித்துள்ளனர். இந்த வழக்கில் சின்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் கைதாகியுள்ளனர். 

ttn

இந்நிலையில் மகளை பறிகொடுத்த பிரியங்காவின் தாயோ, என் மகள் பிரியங்கா போன் செய்த விஷயம் எனக்கு தெரியாது. அவளோட 10 மணி வரைக்கும் ரீச் ஆகாததால், நாங்கள்  ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம். அங்கிருந்து சம்ஷாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக சொன்னாங்க. அவங்க எங்ககிட்ட விசாரணை நடத்தின விதம் கொஞ்சம் கூட சரியில்லை. அங்கிருந்து நாங்க சம்ஷாபாத் போலீஸ் ஸ்டேஷன் போனோம்.  நீட நேரத்துக்கு அப்புறம் தான் எங்ககூட  2 போலீஸ் வந்தாங்க. அதிகாலை 4 மனை வரைக்கும் எங்க பொண்ணு எங்களுக்கு கிடைக்கல. போலீஸ் அலைக்கழிச்சதுனாலையே 3 மணிநேரம் வீணா போச்சு. என் மகள் அப்பாவி அவளை இப்படி பண்ணவனுங்கள,  ஊர் முன்னாடி உயிரோட கொளுத்தணும்’ என்று ஆதங்கமும், ஆவேசமுமாகக் கூறியுள்ளார்.