“என் புருஷன் கொரோனாவால் ரத்த வாந்தி எடுத்து செத்துட்டாரு” : கொலையை மறைக்க நாடகமாடிய பெண் கைது!

 

“என் புருஷன் கொரோனாவால் ரத்த வாந்தி எடுத்து செத்துட்டாரு” : கொலையை மறைக்க நாடகமாடிய பெண் கைது!

இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாதன். 48 வயதான இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும் இரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் புதுச்சேரியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்  காலை  11 மணிக்கு மஞ்சுநாதன் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அப்போது ஊர் மக்களிடம் அவருக்கு பேய் விட்டது, கொரோனா வைரஸ் வந்துவிட்டது. அதனால் அவர் ரத்த வாந்தி எடுக்கிறார் என்று கத்தி அழுதுள்ளார். இதையடுத்து நர்சிங் படிக்கும் அவரது மகள் சரளா உடனடியாக அவரை கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்ற நிலையில் மஞ்சுநாதன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

 

உடனடியாக வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்ததில் அவரது மனைவி சத்யா முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.  இதை தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், ஊரடங்கால் 10 நாட்கள் குடிக்காமல் இருந்த மஞ்சு நாதன் மனநலம் பாதிக்கப்பட்டது போல செய்துள்ளார். இதனால் அவர் குடும்பத்தினர் அவரை கட்டிபோட்டுள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர் மனைவி, மகள்களை அடித்துள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த மனைவி சத்யா கட்டையால் கணவரை தாக்கியுள்ளார். இதில் மஞ்சு நாதன் சம்பவ இடத்திலேயே பலியாக கொலையை மறைக்க கொரோனா என்று நாடகமாடியது  தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்தனர்.