என்.பி.ஆர்-ல் உள்ள மூன்று கேள்விகளை நீக்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

 

என்.பி.ஆர்-ல் உள்ள மூன்று கேள்விகளை நீக்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில்,, “தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை  அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், NPR கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்படமாட்டார்கள் என மத்திய அரசும்  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!

என்.பி.ஆர்-ல் உள்ள சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை நீக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை  அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், NPR கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்படமாட்டார்கள் என மத்திய அரசும்  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!

 

NPR தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்றும் நம்புவோம். NPR தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.