‘என்.ஜி.கே’ ஷூட்டிங் துவக்கம்: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!

 

‘என்.ஜி.கே’ ஷூட்டிங் துவக்கம்: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இன்று துவங்கியது.

சென்னை: சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இன்று துவங்கியது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலம் சரியில்லாததால் ‘என்.ஜி.கே’ ஷூட்டிங் தாமதமானது.

இதன் காரணமாக தீபாவளி ரிலீசில் இருந்து ‘என்.ஜி.கே’ விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தின் பணிகளை துவக்கினார். இந்த படத்தில் கமாண்டோ ஆபீஸர் ரோலில் நடிப்பதால், அதற்கு ஏற்ப கெட்டப்புடன் இருந்தார்.

இந்நிலையில், சிறிய இடைவெளிக்கு பிறகு ‘என்.ஜி.கே’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் துவங்கியுள்ளன. இது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார். இந்த மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங் பணிகளையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

‪#NGK Final Schedule?

A post shared by Prabhu (@prabhu_sr) on

இதனிடையே, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் காதல் டிராக் ஒன்றை பாடகர் சித் ஸ்ரீராம் மற்றும் பாடகி ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளதாக யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘என்.ஜி.கே’ அப்டேட்டுக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். இப்படத்தின் சிங்கிள் அல்லது டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.