என் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி! கையில் குழந்தையுடன் நெகிழும் சென்ட்ராயன்

 

என் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி! கையில் குழந்தையுடன் நெகிழும் சென்ட்ராயன்

நடிகர் சென்ட்ராயன் கையில் தன் குழந்தையை வாங்கிய பின்பு என் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

சென்னை: நடிகர் சென்ட்ராயன் கையில் தன் குழந்தையை வாங்கிய பின்பு என் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகனவர் நடிகர் சென்ட்ராயன். அதைத்தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் சென்ராயன் மூடர் கூடம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். 

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பின் கடந்த ஆண்டு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்று தனது வெகுளித்தனமான தன்மையால் மக்களிடம் மிகவும் பரிச்சியமானவராக மாறினார் சென்றாயன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் கயல்விழி என்பவரை சென்றாயன் காதலித்து திருமணம் செய்துகொண்டாா். ஆனால் அவர்களுக்கு சிறிது காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. 

sendrayan

அதை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கமல் ஹாசன்னிடம் தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க இருப்பதாக சென்ட்ராயன் கூறினார். ஆனால் அவர் அப்படிச் சொல்லிய ஒருசில நாட்களிலேயே கயல்விழி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலேயே சென்ராயன் – கயல்விழி தம்பதிக்கு குடும்பத்தாரின் உதவியுடன் வளைகாப்பு உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டன. 

sendrayan

பின்பு நடிகர் சென்றாயன் மற்றும் கயல்விழி தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோசஷத்தை பகிர்ந்த சென்ராயன் கூறியதாவது, டாக்டர் உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்னு சொன்னதும் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு. என் பையனைக் முதன் முதலில் கையில் தூக்கும்போது இந்த உலகமே எனக்குக் கிடைச்ச மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு.

நான் பிறந்தப்போ எங்க ஊர்ல ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், இப்பொழுது என் பையன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுறாங்க. தாயும், சேயும் நலமா இருக்காங்க. என் சிங்கக்குட்டி ரொம்பவே அதிர்ஷ்டசாலி. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.