“என் கிட்ட இருக்கிறதுதானே அவகிட்ட  இருக்கு” வைப்பாட்டி வச்ச கணவணை தட்டிக்கேட்டதால் ..தீ வைக்கப்பட்ட   மனைவி …..

 

“என் கிட்ட இருக்கிறதுதானே அவகிட்ட  இருக்கு” வைப்பாட்டி வச்ச கணவணை தட்டிக்கேட்டதால் ..தீ வைக்கப்பட்ட   மனைவி …..

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை ,ஆத்திரத்தில் அருகிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றி கணவன் கொளுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தின் புதிய சந்தை பகுதியில் வியாழக்கிழமை இந்த கொடூரமான சம்பவம் நடந்தது

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை ,ஆத்திரத்தில் அருகிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றி கணவன் கொளுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தின் புதிய சந்தை பகுதியில் வியாழக்கிழமை இந்த கொடூரமான சம்பவம் நடந்தது .ஒரு 45 வயது மனைவி ,கணவன்  உள்ளூரில் ஒரு சின்ன வீடு வைத்துக்கொண்டு ,மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு சின்னவீட்டிடமே தவமாக கிடந்ததால் பொங்கியெழுந்து  கணவனிடம் சண்டை போட்டார்.மேலும் கணவன் அந்த மனைவியை மன ரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார் .

odisha.jpg

அவர்களின் இந்த சின்னவீடு சண்டை தினமும் நடந்து ,அந்த பகுதியே சந்தி சிரித்தது .இப்படி சென்ற வியாழக்கிழமை சின்னவீட்டுக்கு கணவன் போய் விட்டு வந்ததை பார்த்த மனைவி வழக்கம்போல கணவனிடம் .”என்கிட்டே இருக்கிறதுதானே அவள் கிட்டேயும் இருக்கு எதுக்கு அவளை வச்சிருக்கே “என்று சண்டை போட்டார் ,சண்டை கடுமையாக முற்றியதில் கணவன் ஆத்திரமுற்று அருகிலிருந்த சமைக்க வச்சிருந்த கெரோசினை எடுத்து மனைவியின் உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார் .
அந்த பெண்ணின் உடல் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் 80 சதவீத தீக்காயங்களுடன் கட்டாக்கில் உள்ள மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .போலீசார் வழக்கு பதிவு செய்து  இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.