என் காதலை குடும்பத்துக்காக தியாகம் செய்தேன்: ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்

 

என் காதலை குடும்பத்துக்காக தியாகம் செய்தேன்: ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்

தனது குடும்பம் மற்றும் அவர்களுடனான பிரச்னை குறித்து அவர் கூறிய பலவிஷயங்கள் ஒளிபரப்பாகவில்லை

அம்மா அப்பாவுக்காக தன்  காதலை தியாகம் செய்ததாக பிக் பாஸ் போட்டியாளர் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்கள்  தங்களின் தனிப்பட்ட விஷயங்களை  பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா, அபிராமி உள்பட பலரும் தங்கள்  சோகக்கதையை கூறி கண்ணீர்  வடித்த  நிலையில் நேற்று  வனிதா தனது சோகக்கதையை கூறினார்.

vanitha

அதில், நீங்கள் வெளியில் சொல்லாத ரகசியம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில், ‘நான் தைரியமான பொண்ணு இல்ல. இப்போ இருக்குற தைரியம் எனக்கு ஏன்  அப்போ வரலைன்னு தெரியல. நான் அப்படி இருந்து இருந்தா நான் விரும்புன லைஃப்  எனக்கு இப்போ கெடைச்சி இருக்கும். நான் ஒருத்தர விரும்புன. என் அம்மா, அப்பா அதை ஏத்துக்கல. லவ் வேணான்னு ரொம்ப கலாட்டா பண்ணாங்க. என்னால அவங்கள மீறி போக முடியல. அதனால என் வாழ்க்கையை  நான் தியாகம் பண்ணிட்டேன். நான் விரும்புன வாழ்க்கை  எனக்கு கிடைக்காமலே போயிடுச்சு. ரொம்ப பொத்தி பொத்தி வளர்த்தாங்க. அதனால கல்யாணம் பண்ணா சுதந்திரமா இருக்கலாம்ன்னு  நெனைச்சி கல்யாணம் பண்ணேன். அதுவும் சரியா இல்ல’ என்றார்.மேலும் தன் வாழ்நாளில் மறக்க முடியதாத நாள் தனது அம்மா இறந்த நாள் என்று கூறி கண்ணீர்  விட்டு அழுதார் வனிதா விஜயகுமார்.

vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  சில விஷயங்களே நேரம் கருதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் தனது குடும்பம் மற்றும் அவர்களுடனான பிரச்னை குறித்து அவர் கூறிய பலவிஷயங்கள் ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.