‘என் கணவரும் ஜெயஸ்ரீயும் சேர்ந்து பார்ட்டி பண்ணுவாங்க…இவ்வளவு தூரம் போகும்னு நான் நினைக்கல’: நடிகை மகாலட்சுமி பரபரப்பு பேட்டி!
ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர்.
சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் சின்னதிரை நடிகை மகாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட தகாத உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர்.
இதுகுறித்து கூறிய நடிகை ஜெயஸ்ரீ, குழந்தையுடன் தனியாக என்னை ஈஸ்வர் நன்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். என் கணவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தேவதையை கண்டேன்’ சீரியலில் மகாலட்சுமியுடன் நடித்திருந்தார். மகாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் என்னிடம் விவகாரத்து பெற்றுக்கொண்டு மகாலட்சுமியை திருமணம் செய்ய ஈஸ்வர் ஆசைப்பட்டார். என்னிடம் இதற்காக விவாகரத்து கேட்டார். நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் தினமும் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்’ என்று கூறினார்.
இந்நிலையில் முதன் முறையாக இதுகுறித்து வாய் திறந்துள்ள நடிகை மகாலட்சுமி, ‘என் கணவர் அனிலும், ஜெயஸ்ரீயும் சேர்ந்து எங்களை பழிவாங்குறாங்க. அவங்களுக்கு எங்களிடம் உள்ள பணம் வேண்டும். அவங்க ரெண்டு பேரும் பார்ட்டி பண்ணுவாங்க. 7 வருஷமா பிரெண்ட்ஸ்ஷிப் வச்சி இருக்காங்க. இது எனக்கு தெரியவே தெரியாது. ஆனா எனக்கும் ஈஸ்வருக்கும் தப்பான உறவு இருக்குன்னு புரொஜக்ட் பண்ணிருக்காங்க. இத என்னால ஏத்துக்கவே முடியல. இதனால என் குடும்பம், நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறோம். இது இவ்வளவு தூரம் போகும்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல’ என்றார்.
‘நானும் ஒரு பொண்ணுதானங்க. என் மானமே போச்சு. ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. நான் ஏன் அவருக்கு வீடியோ கால் பேசப்போறேன். அதுவும் அவங்க மனைவி இருக்கும் போது பேசுவாங்களா? நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற இருக்கிறேன். எங்க கேஸ் கோர்ட்டுல இருக்கு’ என்றார்.