‘என் இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’.. . பூக்கடை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் புகார் !

 

‘என் இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’.. . பூக்கடை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் புகார் !

காவல்நிலையத்தில் வைத்திருந்த தனது  இரும்புப் பெட்டியைக் காணவில்லை என்று பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் முத்துசாமி. இவர் காவல்நிலையத்தில் வைத்திருந்த தனது  இரும்புப் பெட்டியைக் காணவில்லை என்று பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ttn

அந்த புகாரில், ” நான் பூக்கடை காவல் நிலையம் போக்குவரத்து பிரிவில் பணிபுரிகிறேன். காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் எனது இரும்புப் பெட்டி ஒன்றைக் கடந்த 8 மாதங்களாக வைத்திருந்தேன். சென்ற வாரம் நிலையத்துக்கு வந்து ஓய்வு அறை சென்று பார்த்தபோது அந்த பெட்டி இருந்தது. ஆனால் இப்போது காவல் நிலையம் வந்து ஓய்வு அறைக்குச் சென்று பார்த்தபோது எனது பெரிய இரும்புப் பெட்டியைக் காணவில்லை. 

ttn

ஓய்வு அறையிலிருந்த எனது இரும்புப் பெட்டியை எடுத்தவர்களைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து எனது இரும்புப் பெட்டியைப் பெற்றுத் தருமாறும் கணம் ஆய்வாளர் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார். இந்த புகாரின் பேரில் பூக்கடை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.