என்.ஆர்.காங்கிரஸ் தலைவருக்குத் தான் தோல்வி பயம்: புதுச்சேரி முதல்வர் பதிலடி ..!

 

என்.ஆர்.காங்கிரஸ் தலைவருக்குத் தான் தோல்வி பயம்: புதுச்சேரி முதல்வர் பதிலடி ..!

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில், இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அந்தந்த கட்சித் தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில், இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அந்தந்த கட்சித் தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, ஆளும் காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

Rangaswamy

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து இன்று புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி  வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நாராயண சாமி, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்குத் தான் தோல்வி பயம் வந்துவிட்டது என்று ரங்கசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Narayanaswamy

மேலும், நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த என்.ஆர் காங்கிரஸுக்கு மக்கள் ஓட்டுப் போடவில்லை. மக்களவைத் தேர்தல் பலத்த அடி வாங்கியதால் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி மாற்றம் நடக்கும் என நாக்கில் தேன் தடவுவது போலப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.