என் அப்பா பற்றி அப்படி பேசாதீங்க ஒரு மகனா ரொம்ப வலிக்குது: விஜயகாந்த் மகன் உருக்கம்!

 

என் அப்பா பற்றி அப்படி பேசாதீங்க ஒரு மகனா ரொம்ப வலிக்குது: விஜயகாந்த் மகன் உருக்கம்!

சென்னை: தேமுதிக தலைவர்  விஜயகாந்த் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரது மகன் விஜய் பிரபாகரன் உருக்கமான வீடியோ பதிவு  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதையடுத்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்; அவர் நலமுடன் உள்ளார் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் விஜய் பிரபாகரன் பேசுறேன். இப்போ  கேப்டன்க்கு சீரியஸ்ன்னு நியூஸ் வந்துட்டு இருக்கு. அவருக்கு அவ்ளோ சீரியஸா இருந்தா நான் அவரு கூட இருந்து இருப்பேன். எப்போ நான் என் வேலைக்காக நெல்லூர் போயிட்டு இருக்கேன். அவரு பாவம் ஏதோ மக்களுக்காகக் கஷ்டப்பட்டு இப்போ அவரு நேரம்  உடம்பு சரியில்லாமல் போய்டுசிச்சு. ஆமா  நான் ஒத்துக்குறேன் அவருக்குக் கொஞ்ச நாளா உடம்பு சரியில்லாம தான் இருக்கு. அதுக்காக அவரைப் பத்தி வர வதந்திகளைப் பார்க்கும் போது ஒரு மகனா எனக்கு ரொம்ப வலிக்குது. உங்க வீட்ல அப்படி  இருக்கும் போது நீங்க அத பத்தி பேசுவீங்களா? அது ரொம்ப தப்பு. அவரு ராஜ மாதிரி வீட்ல ஜம்முன்னு இருக்காரு. அதுக்குள்ள ஹாஸ்பிடல்ல அட்மிட்னு சொல்லுறது தப்பு. என் உயிரே போனாலும் எங்க அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. அவரு பழைய மாதிரி மறுபடியும் வருவாரு.  அதனால வதந்திகளை யாரும் நம்பாதீங்க. எங்களுக்கு நீங்க தான் நம்பிக்கை குடுக்கணும். அவரு நிழலைக் கூட யாரும் தொட முடியாது.அதனால நம்பிக்கையா இருங்க.அவருக்கு எதுவும் ஆகாது’ என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

 

வழக்கமான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது ,மகன் அவர் வீட்டில் இருக்கிறார் அவருக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.