என் அந்தரங்க புகைப்படங்களை கணவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்: நடிகை பிரியங்கா பரபரப்பு பேட்டி!

 

என் அந்தரங்க புகைப்படங்களை கணவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்:  நடிகை பிரியங்கா பரபரப்பு பேட்டி!

நடிகை பிரியங்கா தன் காதல் கணவரைப் பிரிந்தது  ஏன் என்று விளக்கமளித்துள்ளார்.

கேரளா: நடிகை பிரியங்கா தன் காதல் கணவரைப் பிரிந்தது  ஏன் என்று விளக்கமளித்துள்ளார்.

வெயில் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா. இவர் தொடர்ந்து தொ(ல்)லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோர்க்கு அஞ்சேல் ஆகிய படங்களிலும் சில  மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் லாரன்ஸ் ராம் என்பவரைக் காதலித்து  கடந்த 2012-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சென்னையில் குடியேறினார்கள்.பின்னர் பிரசவத்துக்காக, திருவனந்தபுரம் சென்ற பிரியங்காவுக்கு 2013 ஆம் ஆண்டு, ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின் அவர்  சென்னைக்குச் வரவில்லை என்று கூறப்படுகிறது. குழந்தை முகுந்த் ராம், பிரியங்காவுடன் இருந்துள்ளார்.

priyanka

இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்தார். கணவருக்கு எதிராக, தனது சமூக வலைத்தள பக்கங்களை தவறாகப் பயன்படுத்தியது உட்பட 4 வழக்குகளைப் பதிவு செய்தார். 

priyanka

இதையடுத்து மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பிரியங்கா, தனது கணவரை பிரிந்தது ஏன் என்பது பற்றி விளக்கமளித்துள்ளார். அதில், ‘லாரன்ஸ், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார். அதோடு, சினிமாவில் மீண்டும் நடிக்க தனக்கு  தடை விதித்தார்’ அதனால் அவரை விட்டு பிரிந்தேன். எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நல்ல கேரடக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன்’ என்றார். தனது கணவர் குறித்து பிரியங்கா வெளியிட்டுள்ள தகவல் கேரள  திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.