என்ன வேண்டுதலுக்கு எத்தனை முறை ஆலய பிராகாரத்தை வலம் வர வேண்டும்?

 

என்ன வேண்டுதலுக்கு எத்தனை முறை ஆலய பிராகாரத்தை வலம் வர வேண்டும்?

ஆலயங்களுக்குச் செல்லும் போது, கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர், பிராகாரத்தை சுற்றி வருவது வழக்கமானது தான். ஆனால், எல்லோரும் ஒரு முறை தானே சுற்றி வருகிறார்கள். அதானல் நாமும் ஒரு முறை வலம் வந்தால் போதும் என்று நினைத்து சுற்றி வருதல் கூடாது. ஆலயங்களில், பிராகாரத்தை எத்தனை முறை சுற்றி வந்தால் என்ன மாதிரியான பலன்கள் என்கிற  முழு விவரங்களையும் நாம் சரியாகத் தெரிந்துக் கொண்டு சுற்றி வருவது முக்கியம்.

ஆலயங்களுக்குச் செல்லும் போது, கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர், பிராகாரத்தை சுற்றி வருவது வழக்கமானது தான். ஆனால், எல்லோரும் ஒரு முறை தானே சுற்றி வருகிறார்கள். அதானல் நாமும் ஒரு முறை வலம் வந்தால் போதும் என்று நினைத்து சுற்றி வருதல் கூடாது. ஆலயங்களில், பிராகாரத்தை எத்தனை முறை சுற்றி வந்தால் என்ன மாதிரியான பலன்கள் என்கிற  முழு விவரங்களையும் நாம் சரியாகத் தெரிந்துக் கொண்டு சுற்றி வருவது முக்கியம்.  

temple

டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக கோயில் பிராகாரத்தை சுற்றி வருவதன் பலன்களைப் பார்க்கலாம். 
பொதுவாக ஆலயத்தில் பிரகாரத்தை ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான் சுற்றி வர வேண்டும். சிலர் ஸ்பெஷல் தரிசனம் என்கிறப் பெயரில் குறுக்கு வழியில் இறைவனை தரிசித்து விட்டு, வலமிருந்து இடமாக பாதி தூரம் மட்டும் வந்து, கோயிலை விட்டு வெளியேறி வருவார்கள். இதெல்லாம் தவறு.
ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.
மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
ஐந்து முறை சுற்றி வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
ஏழு முறை வலம் வந்தால் நினைத்த காரியம் ஜெயமாகும்.

temple

ஒன்பது முறை வலம் வருவதால் சத்ரு நாசம், எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். 
பதினொரு முறை சுற்றி வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் கைகூடும். 
பதினைந்து முறை வலம் வந்தால் தனப்ராப்தி உண்டாகும்.
பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும். 
பத்தொன்பது முறை சுற்றி வலம் வந்தால் ரோகம் நிவர்த்தியாகும்.
இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.
இருபத்தி மூன்று முறை சுற்றினால் சுக சௌகர்யத்துடன் வாழ்வு கிட்டும்.
நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.
இருநூற்று எட்டு முறை சுற்றினால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
யாருக்கு என்ன தேவையோ அவர்கள் தான் வலம் வர வேண்டும். பிள்ளைகளுக்காக தாய் செய்கிற பிரார்த்தனைகள் பலிக்கும்.