‘என்ன யாரும் கடத்தவில்லை’: தொரட்டி பட நாயகி ஓபன் டாக்! 

 

‘என்ன யாரும் கடத்தவில்லை’: தொரட்டி பட நாயகி ஓபன் டாக்! 

ஷாமன் தயாரிப்பு சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொரட்டி’.

ஷாமன் தயாரிப்பு சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொரட்டி’. இதில் சத்தியகலா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் கதாநாயகி காணாமல் பொய் விட்டதாகப் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் படத்தின் தயாரிப்பாளர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில் ‘சத்தியகலா பெற்றோருக்கு அவர் சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் அவர்கள் அவரை கடத்தியுள்ளார்கள். அதனால் அவரை உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த மனுவில் அடிப்படையில் போலீசார் அவரை பொள்ளாச்சியில் உள்ள வீட்டிற்குச் சென்று தேடியுள்ளனர். அப்போது அவர் அங்கே இருந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து அவர் பேசுகையில், ‘நான் மாயமாகவில்லை. எனது வீட்டில் தான் உள்ளேன். கருத்து வேறுபாடு காரணமாகத் தான் தயாரிப்பாளர் இப்படிச் செய்துள்ளார். எனது குடும்பத்தைப் பற்றி தேவையில்லாமல் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்’ என்று கூறியுள்ளார்.