‘என்ன மன்னிச்சிடுங்க ஆச்சி.. தம்பிகளை பாத்துக்கோங்க’.. கடிதம் எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!

 

‘என்ன மன்னிச்சிடுங்க ஆச்சி.. தம்பிகளை பாத்துக்கோங்க’.. கடிதம் எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!

மாரியம்மாள் சங்கரன் கோவிலில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து தட்டச்சு படித்து வந்திருக்கிறார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாவலியூத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதி மாடசாமி- மருதக்கனி. இவர்களுக்கு மாரியம்மாள்(18) என்ற மகளும் இரண்டு மகன்களும் இருந்தனர். இதில் மாரியம்மாள் சங்கரன் கோவிலில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து தட்டச்சு படித்து வந்திருக்கிறார். 

ttn

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மாளின் பாட்டி பாபநாசம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது,வீட்டில் மாரியம்மாள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஊர்மக்கள் எல்லாரும் சேர்ந்து மாரியம்மாளைத் தேடியுள்ளனர். ஆனால், அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதனையடுத்து மறுநாள் காலை அவரது உடல் கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ttn

மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களது வீட்டில் இருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதில், என்ன மன்னிச்சிடுங்க ஆச்சி. நான் படிச்சு பாத்தும் என்னால முடியல. தம்பிகளை பாத்துக்கோங்க” என்று மாரியம்மாள் எழுதியுள்ளார். அவர் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெறாததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை மனமுடைய செய்துள்ளது.