‘என்ன அழக வெக்கலன இவர்களுக்குத் தூக்கமே வராது’: மீண்டும் மீரா மிதுனை சீண்டிய வனிதா!
மீண்டும் வனிதா- மீரா மிதுன் சண்டை போட்டுக்கொள்வது புரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை: மீண்டும் வனிதா- மீரா மிதுன் சண்டை போட்டுக்கொள்வது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் போட்டியாளராக வந்தது அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால்க்கு பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இணைந்து ஷெரின் மற்றும் வனிதாவும் அவரை டார்கெட் செய்ய ஆரம்பித்ததால், வேதனை தாங்க முடியாமல் மீரா கதறி அழுதார்.
அதைத்தொடர்ந்து அபி மற்றும் மீரா பகையை மறந்து நேற்று சமாதானம் ஆகினர். இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.அதில் மீரா மிதுன் தனது மனவேதனையை சக போட்டியாளர்களிடம் கண்ணீர் மல்க பகிர்ந்து கொள்கிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/E0KyPxMPlm
— Vijay Television (@vijaytelevision) June 28, 2019
அவர் பேசுகையில், இந்த வீட்டில்,’ என்னை ஒரு நாளுக்கு, ஒரு தடவை கூட அழவைக்கவில்லை என்றால் தூக்கமே வராது’ என்று அழுது கொண்டே கூறுகிறார். அதைத்தொடர்ந்து வனிதா, ‘அவள் போதைக்கு நான் ஒன்னும் ஊறுகாய் இல்லை. கொடுக்க வேண்டிய இடத்தில் சரியாகக் கொடுப்பான்’ என்று அவரிடம் சண்டை போடுவது போல்
மொத்தத்தில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பெரிய சண்டை உள்ளது என்பது மற்றும் நிச்சியம். மேலும் புரோமோவில் காட்டுவது போல் நிகழ்ச்சியில் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.