என்னை யார் வசைப்பாடினாலும் எனக்கு கவலை இல்லை! பாஜகவை லெஃப்ட், ரைட்டு வாங்கிய வைகோ 

 

என்னை யார் வசைப்பாடினாலும் எனக்கு கவலை இல்லை! பாஜகவை லெஃப்ட், ரைட்டு வாங்கிய வைகோ 

காங்கிரஸை விட பாஜகவைதான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

காங்கிரஸை விட பாஜகவைதான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ காஷ்மீர் பிரச்மையில் வாஜ்பாய்  கனவை நிறைவேற்றிவிட்டோம் என மோடி கூறுவது தவறு.  370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என வாஜ்யபாய் எங்களிடம் சொல்லவில்லை. பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என காஷ்மீர் மக்களுக்கு தந்த வாக்குறுதியை நேரு நிறைவேற்றவில்லை. என்னை யார் வசைபாடினாலும் பரவாயில்லை. என்னுடைய பேச்சில் நான் 30 சதவீதம்தான் காங்கிரஸை தாக்கி பேசினேன். 70 சதவீதம் பாஜகவை லெஃப்ட் , ரைட், செண்டர் என தாக்கி பேசியுள்ளேன். பாஜக நெருப்போடு விளையாடுவதாக சொன்னேன்” எனக் கூறினார்.