என்னை பற்றி வதந்தி பரப்பினால் நீதிமன்றத்துக்கு செல்லுவேன்: நடிகை ராய் லட்சுமி ஆவேசம் 

 

என்னை பற்றி வதந்தி பரப்பினால் நீதிமன்றத்துக்கு செல்லுவேன்: நடிகை ராய் லட்சுமி ஆவேசம் 

நடிகை ராய் லட்சுமி தன்னை பற்றி வதந்தி பரப்பினால் நீதிமன்றத்துக்கு செல்லுவேன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

சென்னை: நடிகை ராய் லட்சுமி தன்னை பற்றி வதந்தி பரப்பினால் நீதிமன்றத்துக்கு செல்லுவேன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை ராய் லட்சுமி. இவர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ஜூலி 2  படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலை நாட்டினார். எப்போதும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் படு கவர்ச்சியாகப் புகைப்படம் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷியாக வெய்துவருதை வழகமாக வைத்து வருகிறார்.

raai laxmi

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி கர்ப்பமாக இருப்பதாகக் கடந்த சில தினங்களாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் கூறியதாவது, ‘ஒரு சிலர் என்னை பற்றி முட்டாள்தனமான வதந்திகளைப் பரப்பும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 

என் வாழ்வில் பல காதல் வந்து போயுள்ளது. ஆனால் அதற்காக உங்களுக்கு இஷ்டப்படி எல்லாம் என்னை பற்றி பேசக் கூடாது. நான் மாங்காய் சாப்பிட்டதைப் பார்த்துத் தான் இந்த வதந்தியைப் பரப்பியுள்ளனர். இது போன்ற வதந்தியைப் பரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் ராய் லட்சுமி.