‘என்னை தெரியாதவர்களே யாரும் இல்லை’ : நடிகை தமன்னா பெருமிதம்!

 

‘என்னை தெரியாதவர்களே யாரும் இல்லை’ : நடிகை தமன்னா பெருமிதம்!

எல்லா மொழிகளிலும் நடித்து  வருகிறேன்.  இதனால் இந்தியாவில் என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது

நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்  நடிகை தமன்னா. இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது. தற்போது நடிகை தமன்னா  ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார்.

ttn

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், என்னை போல் பெரிய அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. எல்லா மொழிகளிலும் நடித்து  வருகிறேன்.  இதனால் இந்தியாவில் என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என என்ற அளவுக்கு பிரபலமாகி இருக்கிறேன். எனக்கு கிடைத்துள்ள  புகழ் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  பாகுபலி படத்தில் நடித்து உலகளவில் பிரபலமாகி விட்டேன். தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறேன்’ என்றார்.

ttn

நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக்  ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகை தமன்னாவுக்கு தென் கொரியாவின் KEISIE சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்து, CIAC  டாக்டர்  பட்டம்  வழங்கி கௌரவித்தது.