‘என்னை கேட்காம அவ எதுவுமே செய்யமாட்டா’ : ஆல்யா மானஸா குறித்த உண்மையை உடைத்த விஜய் டிவி பிரபலம்!

 

‘என்னை கேட்காம அவ எதுவுமே செய்யமாட்டா’ : ஆல்யா மானஸா குறித்த உண்மையை உடைத்த விஜய் டிவி பிரபலம்!

நடிகை ஆல்யா மானஸா  பிக் பாஸ் வீட்டில் நுழையப் போவதாக சில நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.

நடிகை  ஆல்யா மானஸா  என்னை கேட்காம எதுவும் செய்ய மாட்டாள் என்று ‘ராஜா ராணி’ இயக்குநர் பிரவீன் பென்னட் தெரிவித்துள்ளார்.

alya

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டிக்குள்  நுழைந்த நிலையில் தற்போது 14 ஆக குறைந்துள்ளது. இதனால்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 வது  போட்டியாளரின்  விஜயம் விரைவில் நடக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதில் பல நபர்களின் பெயர்கள் அடிபட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகை ஆல்யா மானஸா  பிக் பாஸ் வீட்டில் நுழையப் போவதாக சில நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.

alya

இந்நிலையில்  ‘சரவணன் மீனாட்சி’, ‘ராஜா ராணி’ தொடர்களின் இயக்குநர் பிரவீன் பென்னட் பிரபல இணையதள  ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  ஆல்யா மானஸா  செல்வது குறித்துக் கேட்ட போது, அப்படியா போறாளா, என்னை கேட்காம எதுவும் செய்ய மாட்டாள். கலந்துகொள்ள வாய்ப்பு இல்ல’ என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

abi

முன்னதாக அபிராமி குறித்து பேசிய அவர், சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி கேரக்டருக்கு அபிராமியை நாங்கள் ஆடிசன் செய்திருந்தோம்.  அவர் என்னிடம் நான் கவினுக்கு மிகப் பெரிய ரசிகை நேற்று கூறியிருந்தார். அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் கண்டிப்பாக சீரியலில் நடிப்பது பற்றி கேட்போம். அதற்கு அவர் சம்மதம் சொல்வாரா  என்று தெரியவில்லை. கண்டிப்பாக அந்த சீரியலில் கவின் அல்லது சாண்டி  ஹீரோவாக நடிப்பார்கள் என்று தெரிவித்தார்.