என்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் பிடித்தான்: புகார் கொடுத்த இளம்பெண்: மேலும் ஒருவர் கைது!

 

என்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் பிடித்தான்: புகார் கொடுத்த இளம்பெண்: மேலும் ஒருவர் கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளதையடுத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளதையடுத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பெண் பரபரப்பு புகார்:

pollachi ttn

தன்னை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை பதிவு செய்து மிரட்டியதாகப் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,  ‘மூன்று ஆண்டுகளாக நாங்கள் காதலித்தோம். அப்போது என்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் பிடித்தான். அதை வைத்து என்னை மிரட்டியே பைக், பணம் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொண்டான்.

நான் அவனை எதிர்த்துக் கேட்டால், பேஸ்புக், வாட்ஸ்அப்-பில் விட்டுவிடுவேன் என்று  மிரட்டினான்.  என்னைப்போலப் பல பெண்கள் இது போல பாதிக்கப்பட்டுள்ளனர்.  நான் அவனை லவ் பண்ணுகிறேன் என தெரிந்ததும் என்னை அழைத்து பேச ஆரம்பித்தார்கள். இனிமேல் என்னைப்போன்று யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நான் புகார் அளித்தேன்’ என்றார்.

thirunavukarasu ttn

 

மேலும் ஒருவர் கைது:

இந்நிலையில் புகார் தொடர்பாக  கோவையை சேர்ந்த பாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பொள்ளாச்சி காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாசமாக படம்பிடித்து, பணம் பறிக்கும் கும்பல் சிக்கியுள்ள நிலையில், அதே பகுதியில் மீண்டும் ஒருவர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.