‘என்னை கடத்தி வைத்து துன்புறுத்தினார்கள்’ : முகிலன் பரபரப்பு பேட்டி!

 

‘என்னை கடத்தி வைத்து துன்புறுத்தினார்கள்’ : முகிலன் பரபரப்பு பேட்டி!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என தான் துன்புறுத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகார் தெரிவித்துள்ளார்

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என தான் துன்புறுத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகார் தெரிவித்துள்ளார்.

mukilan

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சென்ற  காணமால் போனார்.  இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பெண் ஒருவர் அவர் மீது  பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் வைத்து நேற்று முகிலனை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்

mukilan

இதையடுத்து தனக்கு நெஞ்சுவலி என்று முகிலன் கூறியதால் அவருக்கு சிகிச்சை அளித்தபின்னர் இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த முகிலன், நான் கடத்தப்பட்டேன்,  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட கூடாது என்று கூறி என்னை துன்புறுத்தினார்கள். மக்களாலும், ஊடகங்களினாலும் தான், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்’ என்று பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.