‘என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்’: பிக் பாஸ் சரவணன் வருத்தம்! 

 

‘என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்’: பிக் பாஸ் சரவணன் வருத்தம்! 

பிக் பாஸ்  3 நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டதாக மீராமிதுன் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். அந்த விவகாரம் பெரிய பூகம்பத்தைக் கிளப்பியதால் கமல்ஹாசன் அதை உரையாடினார்.

பிக் பாஸ்  3 நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டதாக மீராமிதுன் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். அந்த விவகாரம் பெரிய பூகம்பத்தைக் கிளப்பியதால் கமல்ஹாசன் அது குறித்து உரையாடினார். அந்த  சமயத்தில் சரவணன் தானும் கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக வெளிப்படையாகக் கூறினார். அவர் விளையாட்டாகச் சொல்ல சமூகவலைத்தளங்களில் அவர் மீது கடும் கண்டனங்கள் எழுந்தது. 

அதனால் கடந்த திங்கள்கிழமை சரவணன் பாதி நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அவரை பிரிந்த சக ஹவுஸ் மேட்ஸ் துக்கம் தாங்க முடியாமல் ஓவென்று கதறி அழுதனர். இந்த நிலையில் வெளியே வந்த சரவணன் இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார். 

அவர் கூறியதாவது, ‘நான் பிக்பாஸில் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு பணம் பங்கு பெற்று கொண்டு , அதன் மூலம் புது வாழ்க்கையைத் துவங்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு இப்படியொரு கலங்கத்தை ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். என்னுடைய கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்களிடம் விளையாட்டாகத்  தவறாக நடந்து கொண்டது உண்மை தான். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டிற்கு அதற்காக செல்லவில்லை. அங்கிருக்கும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டேன். அப்படியிருந்தும் என்னை இப்படி அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்.

இது போன்று நடைபெறும் என்று எனக்கு தெரித்துத்திருந்தால் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம் தான், நான் கூறிய கருத்திற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டார்கள்’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.