‘என்னை அங்கு தான் அடக்கம் செய்ய வேண்டும்…என் சொத்துக்கள் இவர்களுக்கு தான்’ நித்தியானந்தாவின் உயில் ரகசியங்கள்!

 

‘என்னை அங்கு தான் அடக்கம் செய்ய வேண்டும்…என் சொத்துக்கள் இவர்களுக்கு தான்’  நித்தியானந்தாவின் உயில் ரகசியங்கள்!

என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்து இருக்கிறேன்

ஆள் கடத்தல், பாலியல் குற்றங்களில் சிக்கி தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை பிடிக்க  கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட  நிலையில் போலீசார் அவரை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இருப்பினும் நித்தியானந்தா ஜாலியாக தினமும் தனது சீடர்களுடன் சத்சங்கத்தில்  பேசி வருகிறார். 

ttn

இந்நிலையில் நித்தியானந்தா உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் யாருக்கும் எதிரானவன் இல்லை. கைலாசா மூலம் ஆன்மீக பணிகள் செய்ய உள்ளேன். இந்திய நாடு நம் தாய் போன்றது. நான் இறந்த பிறகு என்னை மதுரை ஆதீனத்தில் எப்படி உடலை அடக்கம் செய்வார்களோ. அதே போல் என் பிடதி ஆசிரமத்தில் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்து இருக்கிறேன். என் சொத்துக்கள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய குருபரம்பரை ஆதீனத்திற்குச் சேரும் படி உயில் எழுதி வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.