என்னைத் தொட்டா பல்பு மாதிரி எறிஞ்சிப் போவ ! அனைவரையும் மிரட்டும் 6 மாதக் குழந்தை !

 

என்னைத் தொட்டா பல்பு மாதிரி எறிஞ்சிப் போவ ! அனைவரையும் மிரட்டும் 6 மாதக் குழந்தை !

ஆந்திர மாநிலத்தில் 6 மாதக் குழந்தையின் மீது மின்சார பல்பு வைத்தால் பிரகாசமாக எரியும் காட்சியை பொதுமக்கள் அதிசயமாக கண்டு செல்கின்றனர்.
விலினாமண்டலம், தாமலசெருவு   கிராமத்தில் ஹரிபாபு – சுஷ்மிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே இருந்த எல்இடி பல்பை எடுத்தது.

ஆந்திர மாநிலத்தில் 6 மாதக் குழந்தையின் மீது மின்சார பல்பு வைத்தால் பிரகாசமாக எரியும் காட்சியை பொதுமக்கள் அதிசயமாக கண்டு செல்கின்றனர்.
விலினாமண்டலம், தாமலசெருவு   கிராமத்தில் ஹரிபாபு – சுஷ்மிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே இருந்த எல்இடி பல்பை எடுத்தது. குழந்தை தொட்டதும் அmந்த பல்பு திடீரென பளிச்சென எரியத் தொடங்கியது. இதை பார்த்த ஹரிபாபுவும் சுஷ்மிதாவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையின் உடலில் வைத்தபோதும் அந்த பல்பு எரிந்துள்ளது. இதை அடுத்து அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்த தம்பதி குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். 

baby

குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உடலில் மின்சாரம் இருப்பதாக தெரிவித்தார். மனித உடலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மின்சாரம் இருக்கும். இது குறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கத்தில் பொதுவாகவே குழந்தையின் உடலில் சிறிதளவு மின்சார சக்திஇருக்கும். இந்த குழந்தைக்கு கூடுதலாக மின்சார சக்தி இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள் இதுபோல் கோடியில் ஒருவருக்கு இருக்கும் என்றும் இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 
இதற்கிடையே குழந்தை தொட்டால் பல்பு எரியும் தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதையறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தும் செல்கின்றனர்.