என்னுடைய சிறந்த ஆசானே ஜெயலலிதா தான் – ஜெயக்குமார் 

 

என்னுடைய சிறந்த ஆசானே ஜெயலலிதா தான் – ஜெயக்குமார் 

நமக்கு நல் வழி காட்டிய ஜெயலலிதாவும் நமக்கு சிறந்த ஆசான் தான்  என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நமக்கு நல் வழி காட்டிய ஜெயலலிதாவும் நமக்கு சிறந்த ஆசான் தான்  என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா  மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது, உலகம் சுற்றும் வாலிபர் என்பது போல் பின்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கல்வி அமைச்சர் இங்கு வந்துள்ளார்.என் வாழ்வில் நான் கடந்து வந்த ஒவ்வொரு ஆசிரியரையும் இன்று காலை எண்ணி பார்த்தேன், நன்றியுடன் நினைக்க கண்ணீர் பெருக்கெடுத்தது.

Jayakumar

என் வாழ்வை ஒளிமயமாக்கி இன்று மக்கள் பணி செய்ய அனுப்பி வைத்தவர்கள் ஆசிரியர்கள். அவர்களை எண்ணி சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.ஆசிரியர்கள் ஏணி என்று கூறுவது பொதுவானது, ஆனால் அவர்களை கேணி என்றும் கூறலாம் ஏன் என்றால் துருவி துருவி நீரை எடுத்து கொண்டே இருக்கலாம். அது போல தான் ஆசிரியர்களுக்கு கல்வி ஊற்று. நமக்கு நல் வழி காட்டிய ஜெயலலிதாவும் நமக்கு சிறந்த ஆசான் தான். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.ஆசிரியர்களை ஏமாற்றுவது என்பது மாணவர்கள் அவர்களை அவர்களே ஏமாற்றுவதற்கு சமம்” என்று கூறினார்.