என்னுடைய கனவு நாயகன்கள் இவர்தான்…. ரகுல் பீர்த் சிங் ஓபன் டாக்!

 

என்னுடைய கனவு நாயகன்கள் இவர்தான்…. ரகுல் பீர்த் சிங் ஓபன் டாக்!

விஜய் தேவரகொண்டா மற்றும் ரன்வீர்சிங் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா மற்றும் ரன்வீர்சிங் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திவரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 14 படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

rakul preet singh

தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், நான் தற்போது அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் நான் மிகவும் எதிர்பார்த்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. கதை மிகவும் பிடித்து நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே இனி நடிப்பேன். இனி எல்லா படங்களிலும் நடிக்க மாட்டேன். வெறுமனே டூயட் பாடல் காட்சியில் ஆடிவிட்டு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. விஜய் தேவரகொண்டா மற்றும் ரன்வீர்சிங் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறினார்.