என்னுடன் உறவு வைத்து கொள்: கணவரின் நண்பரை கொலை செய்த இளம்பெண்!

 

என்னுடன் உறவு வைத்து கொள்: கணவரின் நண்பரை கொலை செய்த இளம்பெண்!

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கொன்ற  வழக்கில் கணவன்,  மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு: பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கொன்ற  வழக்கில் கணவன்,  மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

love

பெங்களூரு ராஜகோபால்நகர் லவகுஷா நகரில்  வசித்து வருபவர்  மோகன். இவரது மனைவி ரம்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களது வீட்டில் கடந்த 13ஆம் தேதி மது என்பவர் கொலை செய்யப்பட்ட இறந்து கிடந்தார். இதையடுத்து மதுவின் அண்ணன் சுந்தரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ராஜகோபால் நகர் போலீஸார், கணவன் மனைவியான மோகன் – ரம்யாவை கைது செய்தனர்.

affair

இவர்களிடம் நடத்திய விசாரணையில், மோகனின் நண்பரான மது, லவகுஷா நகரில் உள்ள மோகனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது ரம்யாவுடன் சகஜமாக பேசியுள்ளார். ரம்யாவும் கணவரின் நண்பர் என்ற முறையில் நட்பாக பழகியுள்ளார். ஆனால்  நாட்கள் செல்ல செல்ல, மதுவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் ரம்யாவிடம், தன்னை காதலிக்குமாறும் உறவு வைத்து கொள் என்றும்  கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த ரம்யா அவரை பலமுறை எச்சரித்துள்ளார். 

murder

இருப்பினும் அவர் ரம்யாவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கவே, ஒருகட்டத்தில் விஷயத்தைக் கணவரிடம் கூற , அவர் மதுவை அழைத்து எச்சரித்தார்.ஆனாலும் மது மீண்டும் அத்துமீறியதால் கடந்த சனிக்கிழமை அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் மதுவின்  தங்கையை தாக்கியதோடு,  மோகனின்  காலரை பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, அருகிலிருந்த இரும்பு ராடால் தலையில் அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த மது, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து மோகன் மற்றும் ரம்யா தப்பியோட நினைத்தபோது தான், போலீசார் அவர்களைப் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: துப்பாக்கியுடன் டிக் டோக்: 19 வயது இளைஞர் பரிதாப பலி!