‘என்னால குழந்தையை பாத்துக்க முடியாது’.. 8 மாத குழந்தையைக் கூவி கூவி விற்க முயன்ற தந்தை !

 

‘என்னால குழந்தையை பாத்துக்க முடியாது’.. 8 மாத குழந்தையைக் கூவி கூவி விற்க முயன்ற தந்தை !

எப்போதும்  ராஜதுரை குடித்து விட்டு அவரது மனைவிகளுடன் சண்டை போடுவாராம். இதனால் அவருக்கும்  பேச்சியம்மாளுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது.

திருச்சி லால்குடியில் ராஜதுரை- சித்ரா தம்பதி  வசித்து வருகின்றனர். ராஜதுரைக்கு பேச்சியம்மாள் என்னும் இன்னொரு மனைவியும் இருக்கிறாராம். இவர்கள் மூன்று பேரும் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். எப்போதும்  ராஜதுரை குடித்து விட்டு அவரது மனைவிகளுடன் சண்டை போடுவாராம். இதனால் அவருக்கும்  பேச்சியம்மாளுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது. ராஜதுரை அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவதால் எரிச்சல் அடைந்த பேச்சியம்மாள் தனது 8 மாத குழந்தையை அவரிடமே விட்டு விட்டு சொந்த ஊரான நெல்லை சென்றுள்ளார். 

ttn

தாய் இல்லாமல் குழந்தையை வளர்க்க முடியாது என்று எண்ணிய ராஜதுரை குழந்தையை மனைவியிடம் கொடுப்பதற்காக நெல்லைக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்ததால் நடத்துநர் அவரை திருமங்கலத்திலேயே இறக்கிவிட்டுள்ளார். அந்த சமயம் பார்த்து குழந்தை அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் ஆன ராஜதுரை அங்கேயே அந்த குழந்தையைக் கூவிக் கூவி விற்க முயன்றுள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால், அங்கு வந்து போலீசார் குழந்தையை வாங்கிக் கொண்டு ராஜதுரையை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனையடுத்து பேச்சியம்மாளை வரவழைத்த போலீசார் குழந்தையை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.