என்னது குழந்தைக்கு ஹிட்லர் பெயரா? பெற்றோரை ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ்

 

என்னது குழந்தைக்கு ஹிட்லர் பெயரா? பெற்றோரை ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ்

பிரிட்டனில் குழந்தைக்கு ஹிட்லர் என பெயர் சூட்டிய தம்பதியினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

லண்டன்: பிரிட்டனில் குழந்தைக்கு ஹிட்லர் என பெயர் சூட்டிய தம்பதியினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரிட்டன் நாட்டில் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆடம் தாமஸ் (22)-கிளவுடியா படாடஸ் (38). அவர்கள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். மேலும், நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் அவர்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாமஸ் மற்றும் கிளவுடியா ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட  பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என தெரிய வந்ததையடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில்,  தாமஸ்க்கு 6 ஆண்டுகளும், கிளவுடியாவுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.