என்னது… கவினுக்கு ஏற்கனவே ஆள் இருக்கா : அப்போ சாக்ஷியோட நிலைமை என்ன? 

 

என்னது… கவினுக்கு ஏற்கனவே ஆள் இருக்கா : அப்போ சாக்ஷியோட நிலைமை என்ன? 

கவின் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து வருவதாகத் தயாரிப்பாளர் சந்திரசேகர் கூறியுள்ளார். 

என்னது… கவினுக்கு ஏற்கனவே ஆள் இருக்கா : அப்போ சாக்ஷியோட நிலைமை என்ன? 

சென்னை: கவின் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து வருவதாகத் தயாரிப்பாளர் சந்திரசேகர் கூறியுள்ளார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களுள் ஒருவர் கவின். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் முதலே இவர் வீட்டில் இருக்கும் பெண்களுடனே நேரத்தைக் கழிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு ஏற்றார் போல் சாக்ஷி, லாஸ்லியா இருவரையும் காதலிப்பது போல் நடந்து கொண்டு கடைசியில் நட்பாகத் தான் பழகினேன் என்று அசால்ட்டாக சொல்லி அவர்களின் மனத்தை நொறுக்கினர். 

இவரின் இந்த செயல் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் கோபத்தை  உண்டாக்கியுள்ளது. மேலும் கவின் யாரைத் தான் உண்மையாக காதலில்கிறார்? என்று ஒரு கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கான விடை தற்போது நமக்குத் தெரிய வந்துள்ளது. ஆம்… கவினை வைத்து ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தைத் தயாரித்த சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கவின் குறித்துக் கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, ‘கவினுக்கு ஏற்கனவே வெளியே ஒரு காதலி இருக்கிறார். காதலியுடன் அவர் பேசுவதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் நடிப்பு திறமையைப் பார்த்து தன் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என முடிவு எடுத்தேன். ஆனால் நான் ஏமாந்தது போல, தற்போது தமிழ்நாடு மக்களும் கவினை பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவரின் காதலி யார்? என்பதை நான் சொல்ல மாட்டேன். கவினே விரைவில் வந்து அறிவிப்பார்’  என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். 

வெளியே ஆள் இருந்தும் கவின் எதற்காகச் சாக்ஷியிடம் காதலிப்பதாகக் கூற வேண்டும் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.