என்னங்க பேருந்த மெதுவா ஓட்டுறீங்க…. தகராறில் பயணிகள்…! இதுகெல்லாமா சண்டபோடுவானுங்க!!

 

என்னங்க பேருந்த மெதுவா ஓட்டுறீங்க…. தகராறில் பயணிகள்…! இதுகெல்லாமா சண்டபோடுவானுங்க!!

திண்டிவனம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் பேருந்து வேகமாக செல்லவில்லை என்று கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டிவனம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் பேருந்து வேகமாக செல்லவில்லை என்று கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் சென்னையில் இருந்து தென் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளும் வந்து நின்று பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டுவிட்டு செல்கின்றன. இந்நிலையில் இன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு  விரைவு பேருந்து ஒன்று   வந்தது. அப்பேருந்தானது திண்டிவனம் மேம்பாலத்தின் கீழுள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து நின்ற போது, அப்பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர், நடத்துநர் நேரக்காப்பாளர்  அலுவலத்திற்குள் சென்று வருவதற்குள், ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கவில்லை என்றும்  பின்னால் வந்த அரசு  பேருந்துகள் எல்லாம் தாங்கள் வந்த அரசு  பேருந்தினை முந்தி செல்வதாகவும் இதனால் குறித்த நேரத்தில் சென்னை செல்ல இயலவில்லை எனக்கூறியும் பேருந்தைவிட்டு கீழிறங்கி தகராறில் ஈடுபட்டனர்.

என்னங்க பேருந்த மெதுவா ஓட்டுறீங்க…. தகராறில் பயணிகள்…! இதுகெல்லாமா சண்டபோடுவானுங்க!!

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளில் ஒருவர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற மற்ற அரசு  பேருந்துகளையும் வழிமறித்தார். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டதையடுத்து திண்டிவனம் பணிமனை  நேரக்காப்பாளர் அலுவலகத்தில்  இருந்த போக்குவரத்து ஊழியர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை செய்து அதே பேருந்தில் அனுப்பிவைத்தனர்.