என்ஜாய் பண்ணமாட்டேன், கதவைத் திறந்துவை! – பெண் போலீசிடம் கெஞ்சிய நெல்லை எஸ்.ஐ – வைரல் ஆடியோ

 

என்ஜாய் பண்ணமாட்டேன், கதவைத் திறந்துவை! – பெண் போலீசிடம் கெஞ்சிய நெல்லை எஸ்.ஐ – வைரல் ஆடியோ

திருநெல்வேலியில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் ஒருவர் பெண் காவலர் ஒருவரை தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தும் ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

திருநெல்வேலியில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் ஒருவர் பெண் காவலர் ஒருவரை தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தும் ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி இருப்புப் பாதை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தன்னுடன் பணிபுரியும் சக பெண் காவலரை உல்லாசத்திற்கு அழைத்ததாக ஆடியவை பகிர்பவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 
எஸ்.ஐ-யின் பாலியல் வற்புறுத்தல் குறித்து பெண் காவலர் பல முறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி ஆடியோவை வெளியிட்டதாக அந்த பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. 
அந்த ஆடியோவில், உதவி ஆய்வாளர் பேசும்போது, “நான் இரவு 12 மணிக்கு வருகிறேன், கதவை திறந்து வை. கீழே யாரும் இருக்க மாட்டார்கள். நான் வந்து 10 நிமிடம் இருந்துவிட்டு செல்கிறேன்” என்கிறார். அதற்கு அந்த பெண் காவலர், “வேண்டாம் சார், சாரி” என்று திரும்ப திரும்ப சொல்கிறார். அதற்கு அந்த எஸ்.ஐ “என்ஜாய் பண்ணமாட்டேன்னு சொல்லிடேம்ல. சும்மா கட்டிப்பிடிப்பேன். ஆசைப்பட்டு கேட்கிறேன். யாரும் இல்லை. எஸ்.ஐ நானே கேட்கிறேன்” என்கிறார். வேண்டாம் வேண்டாம் என்று அந்த பெண் காவலர் கெஞ்ச, சரி விடு சரி விடு என்று தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார் எஸ்.ஐ.

குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் பெண்கள் மிகக் கடுமையான பெண் காவலர் என்ற வேலைக்கே வருகின்றனர். அவர்களை இப்படி தங்கள் தேவைக்கு பயன்படுத்தும் உயர் அதிகாரிகள் மீது காவல்துறை, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. தன்னுடைய பாலியல் தேவைக்கு வற்புறுத்தும் எஸ்.ஐ மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!