எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகிறதாம்… கௌதம்மேனன் ஏதோ சொல்றாரு…

 

எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகிறதாம்… கௌதம்மேனன் ஏதோ சொல்றாரு…

‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இயக்குநர் கௌதம்மேனன் பேட்டியில் கூறியுள்ளார்.

எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகிறதாம்… கௌதம்மேனன் ஏதோ சொல்றாரு…

சென்னை: ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இயக்குநர் கௌதம்மேனன் பேட்டியில் கூறியுள்ளார்.

 நடிகர் தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.  ஒன்றாக என்டெர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் மூன்று ஆண்டுகளாக படம் இன்னும் வெளியாகவில்லை. 

ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாகப் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து கொண்டே இருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் எப்போ தான் இந்த படத்தை ரிலீஸ் செய்விர்கள்? என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 

இந்த நிலையில் தற்போது சமீபத்தில் கௌதம்மேனன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் எப்போது வெளியாகும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  ‘இந்த படம் அடுத்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். படக்குழு அதற்காக தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்’ என்று கூறியுள்ளார். இவரின் பேச்சை கேட்ட ரசிகர்கள் இந்த முறையாவது உங்கள் பேச்சை நம்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.