எனக்கு மக்கள் ஒட்டு போட்டு விடுவார்கள் என ஒரு நடிகன் நினைத்தால் அது நடக்காது : நடிகை ரோஜா அதிரடி!

 

எனக்கு மக்கள் ஒட்டு போட்டு விடுவார்கள் என ஒரு நடிகன் நினைத்தால் அது நடக்காது : நடிகை ரோஜா அதிரடி!

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்பது தான் முக்கியம் என்று பதிலளித்தார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர், தேவைப் பட்டால் மக்களின் நலனுக்காக ரஜினியுடன் இணைவேன். நாங்கள் இணைந்தால் அதில் நட்பை விட மக்கள் நலனே முக்கிய செய்தியாக இருக்கும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும், 2021 ல் நடக்கவிருக்கும் தேர்தலில் மக்கள் அதிசயத்தையும் அற்புதத்தையும் 100 சதவீதம் நிகழ்த்துவர் என்றும் தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என்றும் தெரிவித்திருந்தார். 

rajini

இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடிகை ரோஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் நடிகர்கள் ரஜினி கமல் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்பது தான் முக்கியம் என்று பதிலளித்தார். மக்களை நேரடியாகச் சந்திக்காமல் அரசியலில் யாரும் வெற்றி பெற முடியாது என்றும் மக்கள் எனக்கு வாக்கு அளித்து விடுவார்கள் என்று ஒரு நடிகன் நினைத்தால் அது நடக்காது என்றும் தெரிவித்தார்.

roja

மேலும், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக முதலமைச்சர் பழனிசாமி மாறியிருக்கிறார் எனத் தெரிவித்த ரோஜா தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என ரஜினிகாந்த் ஏன் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.