எனக்கு தூங்கும்போது அந்த பழக்கம் இருக்கு: சமந்தா ஓபன் டாக்!

 

எனக்கு தூங்கும்போது அந்த பழக்கம் இருக்கு: சமந்தா ஓபன் டாக்!

சென்னை: தமிழ்-தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தனக்கு தூங்கும் போது இருக்கும் பழக்கம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘யு-டர்ன்’ மற்றும் ‘சீமராஜா’ ஆகிய திரைப்படங்கள் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.13ம் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது இவ்விரு திரைப்படங்களின் புரொமோஷன் பணிகளில் சமந்தா தீவிரம் காட்டி வருகிறார்.

 

இந்நிலையில், நடிகை சமந்தா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் இன்று உரையாடினார். அதில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, தனது பர்சனல் விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். சமந்தாவிடம் தூங்கும் போது உங்களுக்கு நடக்கும் வியாதி உண்டா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இல்லை.. ஆனால் பல் கடிக்கும் பழக்கம் உள்ளது என பதிலளித்துள்ளார்

 

மேலும், தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை மேம்பட்டிருப்பதாக ரசிகரிடம் கூறியுள்ளார்.

 

திருமணம் என்பது பெண்களுக்கு தடையாக இருக்கக் கூடாது, பெண்களை மேம்படுத்த வேண்டும். எனது திருமணம் என்னை மேம்படச் செய்துள்ளது என வாழ்க்கைக்கு உரிய சில அறிவுரைகளையும் சமந்தா தனது ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.